Tue, Aug 25, 2026 03:32 PM

தமிழக வெற்றிக்கழகம் அலுவலக திறப்பு விழா

Posted by admin on 24-05-2026


தமிழக வெற்றிக்கழகம்  அலுவலக திறப்பு விழா

சிவகங்கை சமத்துவபுரத்தில் தமிழக வெற்றி கழக தெற்கு ஒன்றிய அலுவலகம் திறப்பு.

 

சிவகங்கை சமத்துவபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சிவகங்கை தெற்கு ஒன்றிய செயலாளர் பரமேஸ்வரன் ஏற்பாட்டில் சிவகங்கை தெற்கு ஒன்றிய புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ., குழந்தை ராணி நாச்சியார் மற்றும் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ., இளங்கோவன் மாவட்ட செயலாளர் முத்து பாரதி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதிய அலுவலகத்தை சிவகங்கை எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, கட்சிக்கொடியை ஏற்றி அலுவலக செயல்பாடுகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கட்சியின் வளர்ச்சி, பொதுமக்கள் சேவை மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு குறித்து நிர்வாகிகள் உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் , பலர் கலந்து கொண்டனர் . மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டதுடன், அப்பகுதி பொதுமக்களுக்கு அன்னதானமாக உணவு வழங்கப்பட்டது.

புதிய அலுவலகம் மூலம் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டு தீர்வு காணும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், கட்சியின் அமைப்பு பணிகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Share: 6,051 Views

மேலும் படிக்க

சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம் சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம் சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்   சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்த அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து  காவல்துறை. அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து காவல்துறை. அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து  காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர் காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர்   காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 75) உடல்நலக்குறைவால் காலமானார்.  அவரது உடல் சிவகங்கை அர
Leave a Comment

Your comment will be visible after admin approval.