Posted by admin on 06-08-2026
காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 75) உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது உடல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
காரைக்குடி கழனி வாசல் பகுதியைச் சேர்ந்த கே. ஜெகநாதன் என்பவர் கடந்த 19 .5 .2015 அன்று சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் தானம் செய்வதாக ஒப்புதல் கடிதம் அளித்திருந்தார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது விருப்பத்தின் பேரில் அமெரிக்காவில் வசித்த அவரது மகள் கவிதா ஜெகநாதன் ,மருமகன் கதிரவன், பேரன் முனுசாமி, காவியன், க்ரிதின், பேத்தி கெளஷிகா மற்றும் குடும்பத்தினர் உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்பிற்கான பயன்பாட்டிற்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. தமிழ்வாணன் அனாடமி துறைத்தலைவர் மரு. கற்பக ஜோதி, இணை பேராசிரியர் பாரதி ராணி RMO மரு.முகமது ரபி ARMO மரு. தென்றல் மரு. வெங்கடேஷ் முன்னிலையில் ஒப்படைத்தனர். இந்நிகழ்வில் அலுவலக கண்காணிப்பாளர் ரமேஷ் கண்ணன், லயன் சங்கத்தைச் சேர்ந்த எஸ் கே எஸ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்த
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து காவல்துறை.
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து
துபாயில் மர்ம மரணம் கணவரின் உடலை மீட்டு தரக்கோரி மனைவி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
துபாயில் மர்ம மரணம்: கணவரின் உடலை மீட்டுத் தர கோரி மனைவி மனு
துபாயில் மர்மமான முறையில் உயிரிழந்த தனது கணவரி
Leave a Comment
Your comment will be visible after admin approval.