Posted by admin on 06-08-2026
துபாயில் மர்ம மரணம்: கணவரின் உடலை மீட்டுத் தர கோரி மனைவி மனு
துபாயில் மர்மமான முறையில் உயிரிழந்த தனது கணவரின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, உடலை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு மானாமதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நல்லாண்டிபுரத்தைச் சேர்ந்தவர் விஜிகலா. இவரது கணவர் திருநாவுக்கரசு கடந்த 19 ஆண்டுகளாக துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், ஆகஸ்ட் 3ஆம் தேதி உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
முதலில் மாரடைப்பு என கூறப்பட்ட நிலையில், பின்னர் மாறுபட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டதால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவர் கூறினார்.
எனவே, இந்திய வெளியுறவுத்துறை மற்றும் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மூலம் முழுமையான விசாரணை நடத்தி, உயிரிழப்பிற்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து, உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசு உதவ வேண்டும் என குடும்பத்தினருடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
மனு அளித்தார்.
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்த
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து காவல்துறை.
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து
காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர்
காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 75) உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது உடல் சிவகங்கை அர
Leave a Comment
Your comment will be visible after admin approval.