Posted by admin on 18-07-2026
காளையார்கோவிலில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் 37 ஜோடி மாடுகள் பங்கேற்பு! பார்வையாளர்கள் உற்சாகம்!
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவ
டி எல்லை பந்தயம் நடைபெற்றது. நடுமாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக இப்போட்டி நடைபெற்றது. நடு மாட்டு பிரிவில் 21 ஜோடி மாடுகளும் சின்ன மாட்டுப் பிரிவில் 16 ஜோடி மாடுகளும் என மொத்தம் 37 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. காளையார்கோயில் - தொண்டி சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியில் மாடுகள் சீறிப்பாய்ந்து சென்று ஒன்றை ஒன்று முந்தி சென்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மிக விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும், அதனை ஒட்டி வந்த சாரதிகளுக்கும் விழா குழுவினர் சார்பில் ரொக்கம் மற்றும் கோப்பை பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த மாட்டுவண்டி பந்தயத்தினை சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான ரசிகர்கள் உற்சாகதோடு கண்டு களித்தனர்.
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்த
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து காவல்துறை.
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து
காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர்
காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 75) உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது உடல் சிவகங்கை அர
Leave a Comment
Your comment will be visible after admin approval.