Tue, Aug 25, 2026 03:29 PM

தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு

Posted by admin on 04-08-2026


தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு

முன்னாள் அமைச்சரின் முறைகேடுகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் சட்டப்படி எடுத்துச் செல்லப்படும். தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார் பேச்சு


சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சீரணி அரங்கில் தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில் தமிழக முதல்வரின் 52வது பிறந்தநாள் விழா, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி தலைமை தாங்கினார்.

விழாவில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பேசிய எம்எல்ஏ சீனிவாச சேதுபதி, தனது வெற்றிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து, தொகுதியில் மாற்றத்திற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

விழாவில் பேசிய தவெக மாநில கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் சம்பத்குமார், முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனை விமர்சித்து, கூட்டுறவுத்துறை மற்றும் இந்து அறநிலையத்துறையில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தவறுகள் இருந்தால் அவை மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் சட்டப்படி எடுத்துச் செல்லப்படும் என்றும், அவதூறு அல்லது அனாகரிகமான பேச்சுகளுக்கு பதிலாக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Share: 12 Views

மேலும் படிக்க

சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம் சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம் சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்   சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்த அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து  காவல்துறை. அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து காவல்துறை. அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து  காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர் காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர்   காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 75) உடல்நலக்குறைவால் காலமானார்.  அவரது உடல் சிவகங்கை அர
Leave a Comment

Your comment will be visible after admin approval.