Posted by Admin on 02-08-2026
16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு
சிவகங்கை அருகே ஏனாபுரம் புதுப்பட்டி கண்மாய் பகுதியில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர் முரளிகிருஷ்ணன் அளித்த தகவலின் பேரில், சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா மற்றும் வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் வேலாயுதராஜா ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டு கல்வெட்டை படித்தறிந்தனர்.
நான்கு அடி நீளமுள்ள இந்த கல்வெட்டில், “தெய்வ மாவலி வாணாதிராயர்” வழங்கிய நிலத் தர்மம் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த தர்மத்திற்கு கேடு விளைவிப்பவர்கள் கங்கைக் கரையில் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்கள் என்ற எச்சரிக்கையும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
எழுத்து வடிவமைப்பின் அடிப்படையில், இந்த கல்வெட்டு கி.பி. 1515–1533 காலகட்டத்தில் ஆட்சி செய்த சுந்தரத் தோளுடையான் மாவலி வாணாதிராயன் காலத்தைச் சேர்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“தெய்வ மாவலி வாணாதிராயர்” என்ற பெயரில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்வெட்டு இதுவாகும் என்பதால், இந்த கண்டுபிடிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்த
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து காவல்துறை.
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து
காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர்
காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 75) உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது உடல் சிவகங்கை அர
Leave a Comment
Your comment will be visible after admin approval.