Posted by admin on 19-07-2026
பொய் வழக்கு புகார்... செல்போன் டவர் மீது ஏறி 4 மணி நேரம் போராட்டம்; எம்.எல்.ஏ உறுதியால் கீழே இறங்கிய இளைஞர்கள்!
சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே உள்ள மறவமங்கலத்தில், போலீசார் தங்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதாக குற்றம்சாட்டி இரு இளைஞர்கள் செல்போன் டவர் மீது ஏறி 4 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்துப்பாண்டி (21) மற்றும் அகஸ்டின் (19) ஆகியோர் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய நிலையில், தகவலறிந்து போலீசார், டிஎஸ்பி லெலின் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அசம்பாவிதங்களை தவிர்க்க தீயணைப்புத் துறையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவையும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன.
சம்பவ இடத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ குழந்தை இராணி நாச்சியார் நேரில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கினர்.
இந்த சம்பவம் மறவமங்கலம் பகுதியில் பல மணி நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்த
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து காவல்துறை.
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து
காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர்
காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 75) உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது உடல் சிவகங்கை அர
Leave a Comment
Your comment will be visible after admin approval.