Posted by admin on 16-07-2026
முன்விரோதம் காரணமாக அரசு பள்ளி வளாகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவனுக்கு கத்திகுத்து சம்பவத்தில்
2 மாணவர்கள் கைது.
சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டை அருகே உள்ள மல்லல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் இரு மாணவர்களுக்கிடையே முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், ஒரு மாணவர் தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் மற்றொரு மாணவரை குத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் படுகாயமடைந்த மாணவரை ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் உடனடியாக மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மானாமதுரை சிப்காட் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விளக்குளம் கிராமத்தை சேர்ந்த மாணவனையும் பெரியகண்ணனூர் கிராமத்தை மாணவனையும் போலீசார் கைது செய்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்த
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து காவல்துறை.
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து
காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர்
காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 75) உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது உடல் சிவகங்கை அர
Leave a Comment
Your comment will be visible after admin approval.