Posted by admin on 11-07-2026
குன்றக்குடி அடிகளாரின் 102-வது பிறந்தநாள்: மணிமண்டபத்தில் அரசு சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் மலரஞ்சலி!
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், குன்றக்குடி அடிகளார் 102-வது பிறந்தநாள் விழா அரசு விழாவாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவினை முன்னிட்டு, குன்றக்குடியில் அமைந்துள்ள குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தற்போதைய குன்றக்குடி ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் டாக்டர் T.K. பிரபு மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி
மானாமதுரை எம் எல் ஏ இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
இவர்களுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெக வீரபாண்டியன், திருப்பத்தூர் வட்டாட்சியர் மாணிக்கவாசகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்படப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்த
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து காவல்துறை.
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து
காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர்
காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 75) உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது உடல் சிவகங்கை அர
Leave a Comment
Your comment will be visible after admin approval.