Posted by admin on 03-07-2026
கொல்லங்குடியில் ஜூலை 8-ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம்
மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெறுகிறது
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம், நாட்டரசன்கோட்டை உள்வட்டத்திற்குட்பட்ட கொல்லங்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் வரும் ஜூலை 8-ம் தேதி நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெறும் இம்முகாம், கொல்லங்குடியில் உள்ள கதிரேசன் கமலாவதி திருமண மண்டபத்தில் காலை 10 மணியளவில் தொடங்குகிறது.
முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரடியாக மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து, அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான தகவல்களைப் பெறலாம்.
எனவே, கொல்லங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது.
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்த
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து காவல்துறை.
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து
காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர்
காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 75) உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது உடல் சிவகங்கை அர
Leave a Comment
Your comment will be visible after admin approval.