Posted by admin on 22-06-2026
கல்லல் முருகப்பா பள்ளியில் உலக யோகா தினக் கொண்டாட்டம்:
சிவகங்கை மாவட்டம் கல்லல் முருகப்பா மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. தாடாசனம், பத்மாசனம், புஜங்காசனம், பாலாசனம்,பவனமுக்தாசனம்,
விருஷாசனம்
திரிகோணாசனம்
அர்த்த சக்ராசனம்,
வஜ்ராசனம்,
பாதஹஸ்தானம் ஆகிய ஆசனங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டது. பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சுப்பிரமணியன், தேசிய மாணவர் படை ஆசிரியர் கண்ணதாசன் மற்றும் காரைக்குடி சங்கமம் அறக்கட்டளையைச் சேர்ந்த சண்முகநாதன், லோகநாதன், சண்முகப் பெருமாள் ஆகியோர் யோகப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுத்தார்கள். மாணவர்கள் அனைவரும் இணைந்து கூட்டு உடற்பயிற்சியிலும் ஈடுபட்டனர். முன்னதாக தலைமையாசிரியர் அழகப்பன் தலைமையேற்று யோகா தின நிகழ்ச்சியை தொடங்கி வைத்து யோகாவினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய அரசு வழக்கறிஞரும், உறுதிமொழி ஆணையிருமான முருகேசன் யோகா தினத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார். ஆசிரியர்கள் கற்பகவல்லி, அமுதா,மாரிமுத்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆசிரியர் பிரபு நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார்.
வித்யா கிரி கல்லூரியில் கண்ணதாசன் பிறந்தநாள் விழா
கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழா
புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கவியரசு கண்ணதாசன் பிறந்த
காளையார்கோவில் புனித மைக்கேல் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
காளையார் கோயில் புனித மைக்கேல் பாலிடெக்னிக் கல்லூரி, மதுரை பீனிக்ஸ் அரிமா சங்கம் மற்றும்Blossom அரிமா சங்கம் இணைந்த
சேம்பார் நடுநிலைப் பள்ளியில் செஸ் போட்டி
சேம்பார் நடுநிலைப்பள்ளியில் செஸ் போட்டி
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியம் சேம்பார் ஊராட்சி ஒன்றிய நடுந
Leave a Comment
Your comment will be visible after admin approval.