Posted by admin on 23-06-2026
சேம்பார் நடுநிலைப்பள்ளியில் செஸ் போட்டி
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியம் சேம்பார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சதுரங்க போட்டி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சுரேஷ் தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் காளீஸ்வரன் முன்னிலை வகித்தார். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு சதுரங்கம் எவ்வாறு விளையாடுவது என்ற பயிற்சி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் சுரேஷ் வழங்கினார். ஸ்மார்ட் டிவியில் வீடியோக்கள் ஒளிபரப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சேம்பார் நடுநிலைப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் 6 முதல் 8 வகுப்பு வரை மற்றொரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் 12 பேரும் 6 முதல் 8 மாணவர்கள் 20 பேரும் கலந்து கொண்டனர். ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பிரிவில் வெற்றி பெற்று முதல் இடத்தை மாணவன் முகேஷ் இரண்டாவது இடம் டார்வின் தாவீது பெற்றனர். மூன்று மற்றும் நான்காம் இடம் முறையே மகதி ,அருள் ஜோஸ்வின் வெற்றி பெற்றனர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டியில் முதலிடம் ஆர்வின் இரண்டாம் இடம் செலினா மூன்றாம் இடம் ஜோய் வின் வெற்றி பெற்றனர். அனைத்து போட்டிகளையும் தலைமையாசிரியர் சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள் காளீஸ்வரன், முத்துக்குமார், முருகன், சகாய செல்வி, பாரதி மலர், தனபாக்கியம் ஆகியோர் நடத்தினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
வித்யா கிரி கல்லூரியில் கண்ணதாசன் பிறந்தநாள் விழா
கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழா
புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கவியரசு கண்ணதாசன் பிறந்த
காளையார்கோவில் புனித மைக்கேல் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
காளையார் கோயில் புனித மைக்கேல் பாலிடெக்னிக் கல்லூரி, மதுரை பீனிக்ஸ் அரிமா சங்கம் மற்றும்Blossom அரிமா சங்கம் இணைந்த
புதுவயல் வித்யா கிரி கல்லூரியில் உலக ரத்ததான தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுவயல், வித்யா கிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, போதை பொருள் எதிர்ப்பு மன்றம், மற்றும் இந்திய செஞ்சிலுவைச் சங்கம
Leave a Comment
Your comment will be visible after admin approval.