Posted by admin on 10-06-2026
திருக்களாப்பட்டியில் மதுபானக்கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம் திருக்களாப்பட்டியில் மதுபானக்கடையை அகற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் அருகே திருக்களாப்பட்டி அரசுப்பள்ளி அருகே மதுபானக்கடை இயங்கி வருகிறது. கடந்தவாரம் பள்ளிமாணவன் அஸ்வின்(14) தனது நண்பர்களுடன் அக்கடையில் மதுபானம் வாங்கி அருந்திய நிலையில் ஏற்பட்ட தகராறில் அஸ்வின் கழுத்தறுத்து கொ*ல செய்யப்பட்டான். இச்சம்பவத்தைக் கண்டித்தும் பள்ளி அருகே நடத்தப்படும் மதுபானக்கடையை அகற்றக்கோரியும் கிராமத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சேவுகப்பெருமாள், மாவட்டத் தலைவர் சத்தியசீலன், சி.ஐ.டி.யு.மாவட்டச் செயலாளர் சேதுராமன், மாதர் சங்க துணைத் தலைவி சாந்தி, காந்திமதி மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் பாலு ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும் கிராம பொதுமக்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர்கள் மீனாம்பாள், மலர், பத்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
காரைக்குடியில் தீப்பந்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த அமைச்சர் டாக்டர் டி.கே பிரபு
காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனை, மத்திய தொழில் பாதுகாப்பு படை குழு, தமிழ்நாடு காவல்துறை, தமிழ்நாடு ஊர்க்காவல்
திருவேகம்பத்தூரில் மாட்டுவண்டிப் பந்தயம்
திருவேகம்பத்தூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம்: 31 ஜோடி மாடுகள் பங்கேற்பு
சிவகங்
திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு – போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.