Fri, Jun 26, 2026 06:26 PM

காரைக்குடியில் தீப்பந்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த அமைச்சர் டாக்டர் டி.கே பிரபு

Posted by admin on 26-06-2026


காரைக்குடியில் தீப்பந்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த அமைச்சர் டாக்டர் டி.கே பிரபு

காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனை, மத்திய தொழில் பாதுகாப்பு படை குழு, தமிழ்நாடு காவல்துறை, தமிழ்நாடு ஊர்க்காவல் படை குழு, விவேகானந்தா குளோபல் நர்சிங் கல்லூரி, எஸ்எம்எஸ்வி மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து நடத்திய தீப்பந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

இந்தப் பேரணிக்கு  அமைச்சர் டாக்டர் டி.கே பிரபு தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இந்தப் பேரணி, பெரியார் சிலை முதல் புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக செல்லப்பன் வித்யா மந்திர் தாளாளர் c. சத்தியன் கலந்து கொண்டார். சமூக ஆர்வலர் காரைக்குடி இஸ்மாயில் வரவேற்புரை ஆற்றினார். குளோபல் மிஷன் மருத்துவமனை குழுமம்  நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தியது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Share: 6 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.