Posted by admin on 23-06-2026
சிவகங்கையில் மழை எதிரொலி: சொகுசு கார் மீது விழுந்த மரம் – போக்குவரத்து பாதிப்பு
சிவகங்கை நகரில் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்த நிலையில், சிவகங்கை–திருப்பத்தூர் சாலையில் உடையார்சேர்வை ஊரணி அருகே இருந்த பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார் மீது விழுந்தது.
இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தகவலறிந்து வந்த சிவகங்கை வட்டாட்சியர் சிவராமன் தலைமையிலான அதிகாரிகளின் உத்தரவின்படி ஊழியர்கள் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.
சேதமடைந்த கார் நாட்டரசன்கோட்டை பேரூராட்சி திமுக உறுப்பினர் மோகனுக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. மரம் விழுந்ததால் அந்தப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்த
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து காவல்துறை.
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து
காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர்
காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 75) உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது உடல் சிவகங்கை அர
Leave a Comment
Your comment will be visible after admin approval.