Posted by admin on 23-06-2026
சிவகங்கையில் மழை எதிரொலி: சொகுசு கார் மீது விழுந்த மரம் – போக்குவரத்து பாதிப்பு
சிவகங்கை நகரில் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்த நிலையில், சிவகங்கை–திருப்பத்தூர் சாலையில் உடையார்சேர்வை ஊரணி அருகே இருந்த பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார் மீது விழுந்தது.
இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தகவலறிந்து வந்த சிவகங்கை வட்டாட்சியர் சிவராமன் தலைமையிலான அதிகாரிகளின் உத்தரவின்படி ஊழியர்கள் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.
சேதமடைந்த கார் நாட்டரசன்கோட்டை பேரூராட்சி திமுக உறுப்பினர் மோகனுக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. மரம் விழுந்ததால் அந்தப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காரைக்குடியில் தீப்பந்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த அமைச்சர் டாக்டர் டி.கே பிரபு
காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனை, மத்திய தொழில் பாதுகாப்பு படை குழு, தமிழ்நாடு காவல்துறை, தமிழ்நாடு ஊர்க்காவல்
திருவேகம்பத்தூரில் மாட்டுவண்டிப் பந்தயம்
திருவேகம்பத்தூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம்: 31 ஜோடி மாடுகள் பங்கேற்பு
சிவகங்
திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு – போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.