Posted by Admin on 22-06-2026
சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடைபெற்றது
நூலகம் பயன்கள் பொதுமக்களை சென்றடையவும், நூலக வளர்ச்சி தொடர்பாகவும் போட்டித் தேர்வு மாணவர்களுக்கு இடப்பற்றாக் குறை உள்ளதை நிறைவேற்றும் வண்ணம் முக்கியஸ்தர்களின் நன்கொடையாக செட் அமைத்துக் கொடுக்க பேசப்பட்டது. விழாவின் இறுதியில் பூவந்தி சிவகாசி நாடார் கல்லூரியில் இருந்து மாணவிகள் ஒரு மாத பயிற்சி பட்டறை நூலகங்களின் அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும், நூல்களை எவ்வாறு பகுத்து பிரித்து வைக்க வேண்டும் வரும் வாசகர்களுக்கு எவ்வாறு நூலகத்தின் பயன்பாட்டை கொண்டு செல்ல வேண்டும் என்பது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. கலந்துகொண்ட மாணவிகளுக்கு மாவட்ட மைய நூலகர் மு. வெங்கடவேல் பாண்டி சான்றிதழ் வழங்கினார். வாசர் வட்டத் தலைவர் அன்புத் துறை கூட்டத்தில் தலைமையேற்று நடத்திக் கொடுத்தார். மன்னர் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் மற்றும் லைன்ஸ் கிளப் கோவிந்தன் செல்லமணி, பேராசிரியர் சேவுகன், நூலகத்தின் தின வாசகர் பகிரத நாச்சியப்பன் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் உறுப்பினர் மற்றும் வாசகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நூலகர் முத்துக்குமார் வரவேற்புரை ஆற்றினார். நூலகர் வெள்ளைச்சாமி கண்ணன் நன்றி உரை ஆற்றினார்.
காரைக்குடியில் தீப்பந்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த அமைச்சர் டாக்டர் டி.கே பிரபு
காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனை, மத்திய தொழில் பாதுகாப்பு படை குழு, தமிழ்நாடு காவல்துறை, தமிழ்நாடு ஊர்க்காவல்
திருவேகம்பத்தூரில் மாட்டுவண்டிப் பந்தயம்
திருவேகம்பத்தூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம்: 31 ஜோடி மாடுகள் பங்கேற்பு
சிவகங்
திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு – போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.