Fri, Jun 26, 2026 04:07 PM

காரைக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Posted by admin on 25-06-2026


காரைக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

காரைக்குடியில் கல்லூரி மாணவர்கள் நடத்திய போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி 100க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கோவிலூர் நாச்சியப்பா கல்லூரி மாணவர்கள் மற்றும் உமையாள் ராமநாதன் பெண்கள் கலை கல்லூரியை சேர்ந்த  மாணவியர் போதைப் பொருளினால் ஏற்படும் தீமைகளை எடுத்து கூறும் பதாகைகளை ஏந்தி போதைப் பொருளால் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூறி கோஷங்கள் எழுப்பி காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பெரியார் சிலை வரை ஊர்வலமாக சென்றனர் இந்த ஊர்வலத்தை காரைக்குடி மாநகராட்சி ஆணையாளர் பாலு துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Share: 1,458 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.