Posted by admin on 22-06-2026
சாலை விபத்தில் அடுமனை உரிமைளார் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடந்த சாலை விபத்தில் அடுமனை உரிமையாளர் உயிரிழப்பு.
திருப்பத்தூர் அருகே பிரான்மலையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஆனந்த்(30) இவர் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே ஐயங்கார் என்ற அடுமனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஏரியூர் மஞ்சுவிரட்டையொட்டி தனது மனைவியின் ஊரான அம்மாச்சிப்பட்டிக்குச் சென்று விட்டு தனது பைக்கில் திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது கா.பிள்ளையார்பட்டி அருகே பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலைக்காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், தகவலறிந்த திருக்கோஷ்டியூர் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்து இவ்விபத்துக்குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவேகம்பத்தூரில் மாட்டுவண்டிப் பந்தயம்
திருவேகம்பத்தூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம்: 31 ஜோடி மாடுகள் பங்கேற்பு
சிவகங்
திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
திருப்புவனம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு – போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்
சிறுகூடல்பட்டியில் "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" நூல் வெளியீட்டு விழா
சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் நூற்றாண்டு விழா நூல் வெளியீடு
சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் கண்ணதாசனின்
Leave a Comment
Your comment will be visible after admin approval.